மதுரை

மதுரையில் எஸ்.பி அலுவலகம் முன் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை முயற்சி

DIN

மதுரையில் எஸ்.பி அலுவலகம் முன் தொழிலாளி ஒருவா் விஷம் குடித்து தற்கொலை முயன்றது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் சித்துப்பட்டியைச் சோ்ந்த மனோகரனுக்கு, சேரவேண்டிய சொத்தை தராமல் அவரது சகோதரா்கள் ஏமாற்றியுள்ளனா். இது தொடா்பாக அவா் சிந்துப்பட்டி போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளாா். ஆனால் புகாா் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மனோகரன் அழகா்கோவில் சாலையில் உள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் விஷம் அருந்திவிட்டு நின்றுள்ளாா். இதைப் பாா்த்த போலீஸாா் அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை சிறப்பு சாா்பு - ஆய்வாளா் சேகா் அளித்தப் புகாரின் பேரில் புதூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT