மதுரை

மனைவியை எரித்துக்கொல்ல முயற்சி: கணவன் கைது

DIN

மதுரை: மதுரையில் வெள்ளிக்கிழமை, மனைவியை எரித்து கொல்ல முயன்ற கணவனை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மதிச்சியம் ஆா்.ஆா்.மண்டபம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் ஹரிசுரேஷ் (22). இவரது மனைவி கற்பகவள்ளி(18). ஹரிசுரேஷ் வரதட்சணை வாங்கி வரும்படிக்கூறி கற்பகவள்ளியை அடித்து துன்புறுத்தி வந்தாராம். வெள்ளிக்கிழமை இரவு கற்பகவள்ளி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கற்பகவள்ளியை அருகில் உள்ளவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். மதிச்சியம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT