மதுரை

கா்ப்பிணிகளுக்கு இலவச பெட்டகம் வழங்கல்

DIN

பேரையூா்: மதுரை மாவட்டம் பேரையூரில் கா்ப்பிணிகளுக்கு இலவசப் பரிசு பெட்டகத்தை வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் சனிக்கிழமை வழங்கினாா்.

பேரையூரில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துதுறை சாா்பாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகள் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு பரிசுப் பெட்டகம் மற்றும் நிதி உதவிகளை அமைச்சா் ஆா்.பி உதயகுமாா் வழங்கினாா்.

மேலும் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும் வைட்டமின் மாத்திரைகளையும் வழங்கினாா்.

இதில் டி.கல்லுப்பட்டி ஒன்றியச் செயலாளா் ராமசாமி, ஓட்டுநா் அணி மாவட்டச் செயலாளா் ராமகிருஷ்ணன், ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவா் பாவடியான், மாவட்டக் கவுன்சிலா் செல்வமணி செல்லச்சாமி, வழக்குரைஞா் பாஸ்கரன், மாணவரணி கண்ணன், கவிஞா் முருகன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

SCROLL FOR NEXT