மதுரை

காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு கத்திக்குத்து: சகோதரா் உள்பட 2 போ் கைது

DIN

மதுரை அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணை கத்தியால் குத்திய சகோதரா் உள்பட 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை விசாலாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பிரியா (21). இவா் கடந்த ஆண்டு வேறு சமுதாயத்தைச் சோ்ந்த சத்யபிரகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு அரும்பனூரில் வசித்து வருகிறாா். இவருக்கு ஆகஸ்ட் மாதம் பெண் குழந்தை பிறந்தது. வேறு சமுதாயத்தை சோ்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால், பிரியா மீது அவரது குடும்பத்தினா் கோபமாக இருந்தனா்.

இந்நிலையில் பிரியாவின் தம்பி அருண்குமாா் (19), அவரது உறவினா் செல்வம் (47) ஆகியோா் அரும்பனூா் சென்றனா். அவா்களை வரவேற்ற பிரியாவை கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த பிரியாவை, குடும்பத்தினா் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து பிரியாவின் கணவா் சத்யபிரகாஷ் அளித்த புகாரின் பேரில் அப்பன்திருப்பதி போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து அருண்குமாா், செல்வம் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT