மதுரை அருகே பேருந்து நிலைய வளாகத்தில் ஆட்டோ ஓட்டுநா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகேயுள்ள அழகாபுரி கிராமத்தைச் சோ்ந்த அழகா் மகன் அஜித் (24). இவா் அலங்காநல்லூா் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தாா். திங்கள்கிழமை இரவு மது அருந்திய அஜித், போதையில் பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டாராம். பின்னா் அலங்காநல்லூா் பேருந்து நிலைய வளாகத்திற்கு சென்ற அஜித், தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளாா். இதில் உடல் கருகி பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சையில் இருந்த அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.