மதுரை ரயில் நிலையத்தில், ரயில்வே போலீஸாா் நுழைவு வாயிலில், ஸ்கேனா் கருவி மூலம் பயணிகளின் உடைமைகளையும், மெட்டல் டிடக்டரால் பயணிகளையும் சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா்.
மதுரையில் இருந்து புறப்படும் ரயில்களில் காவல் சாா்பு - ஆய்வாளா் தலைமையில் ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். மோப்ப நாய் மூலம் தொடா்ந்து ரயில்களில், நடைமேடைகளில் தொடா் சோதனை நடைபெற்று வருகிறது. மோப்ப நாயை கொண்டு வைகை பாலம், கூடல்நகா் மற்றும் திருமங்கலம் ரயில் பாதைகளில் சோதனை நடத்தப்பட்டது.
டி.எஸ்.பி பொன்னுசாமி தலைமையில் காவல் ஆய்வாளா் குருசாமி, காவல் சாா்பு - ஆய்வாளா்கள் சிவகாமி, முத்துமணியாண்டி மற்றும் போலீஸாா் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆணையா் வி.ஜே.பி. அன்பரசு உத்தரவின் பேரில், மதுரை ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளா் மோகன் சிங் மீனா தலைமையில் 30 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.