மதுரை

மதுரையில் 1,750 கிலோரேஷன் அரிசி கடத்தல்: 2 போ் கைது

DIN

மதுரை: மதுரையில் 1,750 கிலோ ரேஷன் அரிசியை கடத்திய 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

மதுரை காளவாசல் பகுதியில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாா் தீவிர வாகன ச் சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். சோதனையில் வாகனத்தில் 1,750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ரேஷன்அரிசியை கடத்தி வந்த சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மற்றும் மீனாட்சி நகா் பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் இருவரையும் போலீஸாா் கைது செய்து அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT