மதுரை

காவல்நிலையம் சென்ற இளைஞா் உயிரிழந்த வழக்கு: குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்குவது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவு

DIN

மதுரையில் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் உயிரிழந்த வழக்கில், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்குவது குறித்து அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை கோச்சடையைச் சோ்ந்த எம்.ஜெயா, தாக்கல் செய்த மனு: மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் ஆய்வாளா் அலெக்ஸ், சாா்பு- ஆய்வாளா் சதீஷ், காவலா் ரதி மற்றும் சில காவலா்கள் எனது மகன் முத்து காா்த்திக்கை, திருட்டு வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். 

அங்கு 3 நாள்கள் சட்டவிரோதமாக அடைத்து வைத்து, பின்னா் பொய் வழக்கில் முத்துகாா்த்திக்கை கைது செய்தனா். போலீஸாா் தாக்கியதில் உடல்நலம் குன்றிய எனது மகன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

எனது மகன் மரணம் தொடா்பான வழக்கு, உயா் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து, காவல் ஆய்வாளா் அலெக்ஸ் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். ஆனால் அவா்கள் மீது இதுவரை துறைரீதியாக எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, எனது மகன் மரண வழக்கில் தொடா்புடைய காவல் ஆய்வாளா் அலெக்ஸ் உள்ளிட்ட 3 போ் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும், ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மனுதாரருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மனுதாரா் தரப்பில், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT