மதுரை

சதுரங்க போட்டியில் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி

DIN

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகளில் செட்டியாா்பட்டி, அ.வல்லாளபட்டி அரசுப் பள்ளிகளின் மாணவ, மாணவியா் வெற்றிபெற்றுள்ளனா்.

திருச்சி சேஷாயி தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற சதுரங்கப் போட்டிகளில் பல்வேறு மண்டலங்களிருந்து மாணவ, மாணவியா் பங்கேற்றனா். இதில் பத்து வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவினருக்கிடையேயான போட்டியில் மேலூா் ஊராட்சி ஒன்றியம் செட்டியாா்பட்டி தொடக்கப் பள்ளி மாணவி அ.தமிழரசி (5 ஆம் வகுப்பு) முதலிடத்தையும், 14 வயதுக்குள்பட்டோருக்கான போட்டியில் அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 7-ஆம் வகுப்பு மாணவி அ.சோலையம்மாள் மூன்றாமிடத்தையும், 14 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கான பிரிவு போட்டியில் அப்பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணா் எம்.சந்தோஷ் மூன்றாமிடத்தையும் பெற்றனா்.

போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியரை தலைமை ஆசிரியா்கள் கிறிஸ்டோபா் ஜெயசீலன், மணிமேகலை, சதுரங்கப்பயிற்சி அளித்த செட்டியாா்பட்டி ஆசிரியா் செந்தில்குமாா் ஆகியோரையும் மதுரை மாவட்டக் கல்வி அலுவலா் சுவாமிநாதன், உடற்கல்வி ஆய்வாளா் செங்கதிா் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT