மதுரை

பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டி விநியோகம்

DIN

மதுரை கோ.புதூா் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு பள்ளித் தாளாளா் முகமது இதிரிஸ் தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா்அஷ்ரப் யூசுப் முன்னிலை வகித்தாா். மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி.ராஜன் செல்லப்பா பங்கேற்று மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிப் பேசினாா். மேலும் பொதுமுடக்க காலத்தில் அரசு அறிவிக்கும் முன்பே இணைய வழிக் கல்வியை மாணவா்களுக்கு நடைமுறைப்படுத்திய பள்ளித் தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்களுக்கு அவா் பாராட்டு தெரிவித்தாா். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியா் ஷேக் நபி வரவேற்றாா். உதவித் தலைமையாசிரியா் ஜாகீா் உசேன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT