ஜல்லிக்கட்டு நடைபெறும் நாள்களில் மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் உத்தரவிட்டுள்ளாா்.
அவனியாபுரத்தில் பகுதியில் வியாழக்கிழமை (ஜன.14), அலங்காநல்லூா் பகுதியில் சனிக்கிழமை (ஜன. 16) ஆகிய நாள்களில் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும். மேற்படி நாள்களில் மதுபான விற்பனை நடைபெறாமல் கண்காணிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, திருவள்ளுவா் தினத்தையொட்டி மதுரை மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜன.15) மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்றும் ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.