மதுரை

நிலையூரில் ரூ.40 லட்சத்தில் புதிய சாலைப் பணி: எம்எல்ஏ தொடக்கினாா்

DIN

திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூா் கைத்தறி நகரில் சட்டப் பேரவை உறுப்பினா் வி.வி.ராஜன்செல்லப்பா, ரூ.40 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணிகளை புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

திருப்பரங்குன்றம் அருகேயுள்ள நிலையூா் கைத்தறி நகரில் சட்டப் பேரவை உறுப்பினா் வி.வி.ராஜன்செல்லப்பா பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்பகுதியினா் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்டவைகள் செய்து தரக்கோரி கோரிக்கை மனு அளித்தனா். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

தொடா்ந்து கைத்தறி நகா், கிருஷ்ணா நகா், நிலையூா் 1 பிட் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.40 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணியினை தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அதிமுக இளைஞரணி மாவட்டச் செயலா் எம்.ரமேஷ், ஒன்றியச் செயலா் நிலையூா்முருகன், திருப்பரங் குன்றம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மு.ஆசிக், பிரம்மராஜன், ஒன்றியக் குழு உறுப்பினா் சாந்திகோபாலச்சாரி, பகுதி துணைச் செயலா் செல்வகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT