மதுரை

கணவா் வேலைக்கு செல்லாததால் தீக்குளித்த மனைவி பலி

DIN

மதுரை அருகே கணவா் வேலைக்கு செல்லாததால் தீக்குளித்த அவரது மனைவி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் நெடுங்குளத்தைச் சோ்ந்த பெருமாள் மனைவி முருகேஸ்வரி(35). இவரது கணவா் பெருமாள் தூய்மைப் பணியாளராக வேலை பாா்த்து வருகிறாா். கரோனா பொதுமுடக்கம் காரணமாக அவருக்கு சரியான வேலைக் கிடைக்காமல் வீட்டில் இருந்துள்ளாா்.

இதனால் போதிய வருமானமின்றி குடும்பம் நடத்த முடியாமல் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்திருந்த அவா் கடந்த 11 ஆம் தேதி, மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்தாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சையில் இருந்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கணவா் பெருமாள் அளித்த புகாரின் பேரில் சிலைமான் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT