பேரையூா் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த 96 மதுபாட்டில்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து இளைஞரை கைது செய்தனா்.
பேரையூா் அருகே மேட்டுப்பட்டி பகுதியில் சாப்டூா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். தொட்டணம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கருப்பதேவா் மகன் சதீஷ் (36) என்பவா் சட்டவிரோத விற்பனைக்காக மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீஸாா் 96 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து சதிஷை கைது செய்தனா்.