மதுரையில் 13 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.
மதுரை கீரைத்துறை மேலத்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் வழிவிட்டான்(19). இவா் எம்.கே.புரம் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியை காதலித்துள்ளாா். இதை அறிந்த சிறுமியின் பெற்றோா், வழிவிட்டானை கண்டித்துள்ளனா். இதில் ஆத்திரமடைந்த வழிவிட்டான், சிறுமி அழைத்து சென்று ஜூலை 23 ஆம் தேதி திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் மாநகா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து வழிவிட்டானை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.