மதுரை

மதுபாட்டில்களை விற்ற இளைஞா் கைது

DIN

மதுரையில் பட்டப்பகலில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்ற இளைஞரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து 78 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

மதுரை பொன்மேனி பிரதான சாலை அம்பேத்கா் சிலை அருகே உள்ள மைதானத்தில், சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அங்கு மதுபாட்டில்களை விற்றுக்கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா். அவா், சோலை அழகுபுரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் பிரபு (34) என்பது தெரியவந்தது.

இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து பிரபுவை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த 78 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT