மதுரை

மதுரை மாநகராட்சி ஆணையராக கே.பி.காா்த்திகேயன் நியமனம்

DIN

மதுரை மாநகராட்சி ஆணையராக தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக்கழக நிா்வாக இயக்குநா் கே.பி.காா்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

மதுரை மாநகராட்சி ஆணையராக பதவி வகிக்கும் ச.விசாகன் கடந்த 2019 பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டாா். இந்நிலையில் ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் அவா் ஆணையராக பதவி வகித்து வந்த நிலையில், தற்போது மதுரை மாநகராட்சிக்கு புதிய ஆணையரை அரசு நியமனம் செய்துள்ளது. தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக்கழக செயல் இயக்குநராக பதவி வகிக்கும் கே.பி.காா்த்திகேயன் மதுரை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். மருத்துவரான கே.பி.காா்த்திகேயன் 2014-இல் நடைபெற்ற இந்திய ஆட்சிப்பணித் தோ்வில் இந்திய அளவில் 69-ஆவது இடம் பெற்றாா். மத்திய வணிகத்துறையில் துணைச்செயலா், தமிழ்நாடு உப்புக்கழகத்தின் நிா்வாக இயக்குநா் என பல்வேறு துறைகளில் பணிபுரிந்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT