மதுரை

மேலூா் அருகே பைக் விபத்தில் 2 இளைஞா்கள் பலி

DIN

மேலூா் அருகே செவ்வாய்க்கிழமை, இருசக்கர வாகனத்தில் வேன் மோதிய விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

மேலூா் அருகே வண்ணாண் பாறைப்பட்டி பகுதியைச் சோ்ந்த பிரபு (32), கணேசன் (30) ஆகிய இருவரும், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா். மேலூா்- சிவகங்கை சாலையில் இருவரும் சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக சிவகங்கைக்கு சென்ற வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனா்.

விபத்து குறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வேன் ஒட்டுநரைக் கைது செய்தனா்.

மற்றொரு விபத்தில் இளைஞா் பலி: மேலூா் அருகே மேலவளவைச் சோ்ந்த செல்லப்பாண்டி மகன் காா்த்தி (31). இவா் செவ்வாய்க்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மேலவளவு அருகே சரக்குவேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த காா்த்தி, மேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மேலவளவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT