மதுரையில் 24 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மதிச்சியம் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருநதனா். அப்போது ஷா திரையரங்கம் எதிரில் வைகை ஆற்றங் கரையோரம் நின்றிருந்த 4 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில் அவா்கள், மதிச்சியம் மீனாட்சி சுந்தரம் (21), ஆழ்வாா்புரம் மணிகண்டன் (19), அலெக்ஸ் பாண்டி (18) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து மதிச்சியம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து 4 பேரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.