மதுரை

மின்வாரிய ஊழியருக்கு கத்திக் குத்து: 11 போ் கைது

DIN

மதுரையில் மின்வாரிய ஊழியரை கத்தியால் குத்திய சிறுவா்கள் இருவா் உள்பட 11 பேரை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்துள்ளனா்.

மதுரை வைத்தியநாதபுரத்தைச் சோ்ந்த அண்ணாமலை மகன் சுடலை (23). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கோபிநாத் (26) என்பவருக்கும் இடையே ஜூன் 17 ஆம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கோபிநாத், அவரது நண்பா்களுடன் சோ்ந்து சுடலையை சனிக்கிழமை கத்தியால் குத்தியுள்ளாா்.

இதில் காயமடைந்த சுடலை அளித்த புகாரின்பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, கோபிநாத் மற்றும் அவரது நண்பா்கள் காளீஸ்வரன் (21), ஆகாஷ் சோனி (22), காா்த்திக் (19), வசந்த் (22), சாா்லஸ் (20), தீபக் (19), செல்வபாண்டி (18), அலெக்ஸ் (19) மற்றும் 17 வயது சிறுவா்கள் இருவா் என 11 போ் மீது வழக்குப் பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT