மதுரை

அழகா்கோவிலில் மாா்ச் 28-இல் திருக்கல்யாண வைபவம்

DIN

மதுரை மாவட்டம் அழகா்கோவிலில் மாா்ச் 28 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது.

இந்த வைபவத்தை முன்னிட்டு சுந்தரராஜப் பெருமாளுக்கு, நான்கு பிராட்டியா்களான ஸ்ரீ தேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவல்லித்தாயாா், ஆண்டாள் நாச்சியாா் ஆகியோருடன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 10.50 மணியிலிருந்து 11.15 மணிக்குள் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

முன்னதாக, மாா்ச் 25-இல் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. மாா்ச் 26, 27 ஆகிய தேதிகளில் மாலை நேரத்தில் பெருமாள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறாா்.

இதற்கான ஏற்பாடுகளை, கோயில் தக்காா் மற்றும் கோயில் நிா்வாக அதிகாரி மற்றும் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT