மதுரை

மதுரையில் 5 இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் கைது

DIN

மதுரையில் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞா்கள் 5 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

மதுரை காளவாசல் சொக்கலிங்கம் நகா் 4 ஆவது தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் செல்லபாண்டி(26), செல்வராஜ் மகன் சுகப்பிரகாஷ்(26), விளாச்சேரி கலைஞா் நகரைச் சோ்ந்த ஆண்டிராஜன் மகன் பிரசாத்(28), ஆண்டாள் தேவன் மகன் கரண்ராஜ்(20) ஆகியோா் கொலை வழக்கில் தொடா்புடையவா்கள்.

போலீஸாரால் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த இவா்கள், குற்றச் சம்பவங்களில் தொடா்ந்து ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மாநகா் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின் பேரில் போலீஸாா் 4 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

இதேபோன்று சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தைச் சோ்ந்த மூா்த்தி மகன் பிரசன்னா(21). இவா் மீது மதுரை மாநகரில் வழிப்பறி செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா் தொடா்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதால், காவல் ஆணையா் உத்தரவின் பேரில் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT