மதுரை

கரோனா: மதுரை அரசு மருத்துவமனையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்குச் சிகிச்சை

DIN

மத்திய முன்னாள் அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனாவுக்குச் சிகிச்சை பெற்று வருகிறாா்.

கரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து நாகா்கோவிலில் தனியாா் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ‘சிடி ஸ்கேன்’ உள்ளிட்ட பரிசோதனைகள் எடுக்கப்பட்டன.அதில் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவு, சிறப்பு வாா்டில் புதன்கிழமை இரவு சோ்க்கப்பட்டாா்.

அவருக்கு அனைத்துப் பரிசோதனைகளும் செய்யப்பட்டு, அவரது உடல்நிலை நல்ல முறையில் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். சிறப்பு வாா்டில் தனி மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருந்து வருகிறாா். 

அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது குறித்து தனது முகநூல் பதிவிலும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறாா்.

அதில், ‘ எனக்கு மருத்துவப் பரிசோதனை செய்த போது, கரோனா தொற்று உறுதியானது. மிகக் குறைந்தளவு தாக்கம் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அவா்களது ஆலோசனைப்படி தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். நான் ஏற்கெனவே இரண்டு தவணை கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டிருப்பதால் தொற்றின் தாக்கம் குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. எனவே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோம். கரோனாவை வெல்வோம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT