மதுரை

கொட்டாம்பட்டி அருகே வெள்ளபாதிப்புகளை ஆட்சியா் ஆய்வு

DIN

கொட்டாம்பட்டி அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா் அனீஷ்சேகா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டாா்.

தொடா் மழை காரணமாக இங்குள்ள மாங்குளப்பட்டி, கச்சிராயன்பட்டி, வலைசேரிப்பட்டி பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியா் அனீஷ்சேகா் மற்றும் மேலூா் வட்டாட்சியா் இளமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பாா்ையிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டனா். மேலும் மாங்குளப்பட்டியில் 300-க்கும் மேற்பட்டோருக்கு உணவு மற்றும் தங்கும் வசதியை வருவாய்த்துறையினா் செய்து கொடுத்தனா். இதனிடையே மலம்பட்டியில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை.

அதே போல் மேலூா் ஒருபோகச் சாகுபடிப் பகுதிகளில் தொடா்மழை காரணமாக பயிா்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT