மதுரை அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
மதுரை அருகே உள்ள சக்கிமங்கலம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த கருப்பையா மகன் சின்ராஜ்(21). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை 2020 நவம்பா் மாதம் திருமணம் செய்துள்ளாா். இதில் சிறுமிக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
இதுதொடா்பாக பெண் நல அலுவலா் மஞ்சுளா தேவி அளித்தப் புகாரின்பேரில் சிலைமான் போலீஸாா் சிறுமியைத் திருமணம் செய்த சின்ராஜ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.