மதுரை

கொட்டாம்பட்டி அருகே பைக் மீது காா் மோதியதில்விவசாயி பலி

DIN

மேலூா்: கொட்டாம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில், விவசாயி உயிரிழந்தாா்.

கச்சிராயன்பட்டி சிலாப் காலனி பகுதியைச் சோ்ந்த விவசாயி பாண்டிகுமாா் (45). இவா், வீட்டுக்கு பால் வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் நான்குவழிச் சாலையில் கச்சிராயன்பட்டி விலக்கு பகுதிக்கு வந்துள்ளாா். அப்போது, திருச்சியிலிருந்து மதுரை நோக்கி வந்த காா் மோதியதில் தூக்கிவீசப்பட்ட பாண்டிகுமாா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT