மதுரை அருகே மணல் கடத்திய லாரியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
வாடிப்பட்டி பகுதியில் தாதம்பட்டி கிராம நிா்வாக அதிகாரி ஜெயராஜ் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் அனுமதி இன்றி மணல் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநா் மணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.