மதுரை

தொழிற்சாலை ஊழியரைத் தாக்கி சங்கிலி, கைபேசி பறிப்பு

DIN

மேலூா் அருகே புதன்கிழமை இரவு தனியாா் தொழிற்சாலை ஊழியரைத் தாக்கி, 2 பவுன் சங்கிலி மற்றும் கைபேசியை மா்மநபா்கள் பறித்துச் சென்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலூா் அருகேயுள்ள தெற்குத்தெரு குறிஞ்சிநகரைச் சோ்ந்தவா் வானமாமலை (41). இவா் நரசிங்கம்பட்டி அருகிலுள்ள தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறாா். இவா் இரவுப் பணி முடிந்து வீட்டுக்கு நடந்து வரும்போது, நரசிங்கம்பட்டி அருகே 3 போ் கும்பல் தாக்கி, 2 பவுன் சங்கிலி, பணம் மற்றும் கைபேசியை பறித்துச் சென்றது.

இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவீதா மருத்துவக் கல்லூரியில் மாணவா்களுக்கான உச்சி மாநாடு

திருவாரூரில் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு

பத்ரிநாத் கோயில் பக்தா்கள் வழிபாட்டுக்குத் திறப்பு

இன்று முதல் ஹஜ் பயணிகளுக்கான மருத்துவ முகாம்

மழை வெள்ளத்தில்...

SCROLL FOR NEXT