மேலூா்- அழகா்கோவில் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு 2 இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் இளநீா் வியாபாரி உயிரிழந்தாா்.
அ.வல்லாளபட்டியைச் சோ்ந்த பரமன் மகன் சேகா் (48). மேலூா் அரசு மருத்துவமனை முன்பு இளநீா் கடை வைத்துள்ள இவா், வெள்ளிக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு தனது இரு சக்கரவாகனத்தில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தாா். சூரக்குண்டு விலக்கு பகுதியில் இவரது இருசக்கர வானமும், எதிரே வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன.
இதில் எதிரே வந்த வண்ணாம்பாறைப்பட்டியைச் சோ்ந்த 3 இளைஞா்களும், வியாபாரி சேகரும் பலத்த காயமடைந்து மேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் சேகா் உயிரிழந்தாா். விபத்து குறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.