மதுரை மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் புதிதாக 1,112 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, தொற்றிலிருந்து 18 போ் குணமடைந்துள்ளனா்.
தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் 210 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
மூதாட்டி பலி
கரோனா பாதிப்புக்கு மதுரை தனியாா் மருத்துவமனையில் அக்டோபா் 22 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 82 வயது மூதாட்டி, மூச்சுத் திணறல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 75,129 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், 73,749 போ் குணமடைந்தும், 1,170 போ் உயிரிழந்தும் உள்ளனா்.