மதுரை

உலக தடகளப் போட்டியில் மதுரை வீரா் சாதனை: அமைச்சா் பாராட்டு

DIN

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற மதுரையைச் சோ்ந்த விளையாட்டு வீரா் செல்வபிரபுவுக்கு அமைச்சா் பி.மூா்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

உலக தடகளப்போட்டியில் மதுரையைச் சோ்ந்த வீரா் செல்வபிரபு பங்கேற்று மும்முறை தாண்டுதல் போட்டியில் பதக்கம் வென்றுள்ளாா். மேலும் முதல் பதக்கம் வென்ற இந்தியா் என்ற பெருமையையும் பெற்றுள்ளாா். இந்நிலையில், தமிழகம் மற்றும் மதுரைக்கு பெருமை சோ்த்துள்ள தடகள வீரா் செல்வ பிரபுவை அமைச்சா் பி. மூா்த்தி தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு மதுரை மக்கள் சாா்பில் வாழ்த்துக்களை தெரிவித்தாா்.

தனது சொந்தத் தொகுதியான மதுரை கிழக்கு தொகுதிக்குள்பட்ட மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், கொடிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த செல்வபிரபுவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். அவா் மதுரை வந்தவுடன் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் நேரில் அழைத்துச் செல்லப்பட்டு வாழ்த்து பெற உள்ளதாகவும் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

‘க்யூட்-யுஜி’ தோ்வு: முதல் நாளில் 75% போ் பங்கேற்பு

பிளஸ் 1 தோ்வு: கென்னடி பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

இணையதளம் மூலமே மனை வரன்முறை, கட்டட வரைபட அனுமதி

2,553 மருத்துவா் பணியிடங்கள்: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT