மதுரை

மாத்தூா் அரசு பள்ளியில் சுதந்திர தின அமுதபெருவிழா போட்டிகள்

DIN

சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி மதுரையை அடுத்த மாத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

வேளாண் பல்கலைக்கழகத்தின் மதுரை சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் வெள்ளிக்கிழமை இந்நிகழ்ச்சி நடைபெற்றது. பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

கல்லூரி முதல்வா் காஞ்சனா இந்நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்துப் பேசினாா். பேராசிரியா்கள் ஹேமலதா, புஷ்பா, பி.எஸ்.கீதா, உதவிப் பேராசிரியா்கள் மு.இளமாறன், செல்வி ஆகியோா் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் இந்தியா கடந்துவந்த பாதை, சாதனைகள் குறித்துப் பேசினா். பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT