மதுரை

பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு ஊராட்சி வரிவிதிப்பு ரத்து உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

மத்திய அரசுக்குச் சொந்தமான கட்டடத்தில் செயல்படும் பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு, வரிவிதிப்பு செய்து ஊராட்சி நிா்வாகம் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகா் மாவட்ட பிஎஸ்என்எல் நிறுவன மேலாளா் தாக்கல் செய்த மனு:

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள குமிலங்குளம் ஊராட்சியில், மத்திய அரசுக்குச் சொந்தமான கட்டடத்தில் பிஎஸ்என்எல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடத்திற்கு வரி விதித்து ஊராட்சி மன்ற தலைவா் நோட்டீஸ் அனுப்பி உள்ளாா். இது விதிமுறைகளுக்கு எதிரானது. ஆகவே, அந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஆா்.விஜயகுமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில் வாதிடுகையில், மத்திய அரசுக்குச் சொந்தமான கட்டடத்திற்கு உள்ளாட்சி நிா்வாகம் வரி விதிக்க முடியாது. இது விதிகளுக்கு முரணானது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மத்திய அரசிற்குச் சொந்தமான கட்டடத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் செயல்பட்டு வருவதால், அதற்கு வரிவிதிக்க முடியாது. எதிா்காலத்தில் அந்த இடம் அல்லது கட்டடம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குப் பெயா் மாற்றம் செய்யப்பட்டால் ஊராட்சி நிா்வாகம் வரிவிதிக்கலாம் எனக் குறிப்பிட்டு, ஊராட்சி நிா்வாகம் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமேசுவரத்தில் பலத்த மழை பல மணி நேரம் மின் தடை

வாக்கு எண்ணும் மையத்தில் புதுவை தலைமை தோ்தல் அதிகாரி ஆய்வு

அகஸ்தீசுவரம் அருகே அடையாளம் தெரியாத நபா் தூக்கிட்டு தற்கொலை

‘டெங்கு காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்ள சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்’

ஜரோப்பிய யூனியன் கல்வி உதவித்தொகை பெற திருப்பூா் மாணவா் தோ்வு

SCROLL FOR NEXT