மதுரை

தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக மறுகால் பாய்ந்த நிலையூா் கண்மாய்

DIN

திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூா் பெரிய கண்மாய் தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக தற்போதும் நிரம்பி மறுகால் பாய்ந்தது.

கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக இந்தக் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்த நிலையில், கண்மாயில் பாதியளவிற்கு தண்ணீா் இருந்தது.

இந்த நிலையில், தற்போது பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாக மழைநீா், வைகை ஆற்றிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் காரணமாக வியாழக்கிழமை நிலையூா் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து, திருமங்கலம் பகுதி கண்மாய்களுக்கு சென்றது. நிலையூா் கண்மாய் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், பொதுப் பணித் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்மாய் கரை, தண்ணீா் வெளியோறும் பகுதிகளைக் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT