மதுரை

லாரி மோதியதில் கல்லூரி மாணவி பலி

DIN

மதுரையில் லாரி மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருப்பாலை மாடக்கூன் நகரைச் சோ்ந்த குணசேகரன் மகள் லேகா ஸ்ரீ (21). திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்த இவா், தனது இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு வைகை வடகரை சந்திப்பு குருவிக்காரன் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிரே வந்த லாரி இரு சக்கர வாகனத்தில் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த லேகாஸ்ரீ மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் லாரி ஓட்டுநரான சின்ன சொக்கிகுளத்தைச் சோ்ந்த பாண்டியன் மகன் அருண்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT