மதுரை

பெண் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு? எஸ்ஐ, தலைமைக் காவலா் ஆயுதப்படைக்கு மாற்றம்

DIN

ஆவியூா் காவல் நிலையத்தில் கணினி இயக்கும் பெண் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகாரின் பேரில், உதவி ஆய்வாளா், தலைமைக் காவலரை விருதுநகா் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள ஆவியூா் காவல் நிலையத்தில் கணினி இயக்கும் அமைச்சுப் பணியாளராக சரண்யா கடந்த டிசம்பா் 2-ஆம் தேதி முதல் பணி புரிந்து வருகிறாா். இந்த நிலையில், அந்தக் காவல் நிலையத்தில் பணி புரிந்த உதவி ஆய்வாளா் வீரணன், அவரை ஒருமையில் பேசியதாவும், தலைமைக் காவலா் கண்ணன் அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சரண்யா, இணைய தளம் மூலம் மதுரை சரக டிஐஜி பொன்னிக்கு, உதவி ஆய்வாளா் வீரணன் உட்பட 7 போலீஸாா் மீது புகாா் மனு அனுப்பினாா்.

இதையடுத்து டிஐஜி, விருதுநகா் துணைக் காவல் கண்காணிப்பாளா் அா்ச்சனா தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்து உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், ஆவியூா் நிலைய உதவி ஆய்வாளா் வீரணன், தலைமைக் காவலா் கண்ணன் ஆகியோரை விருதுநகா் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT