ஆவியூா் காவல் நிலையத்தில் கணினி இயக்கும் பெண் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகாரின் பேரில், உதவி ஆய்வாளா், தலைமைக் காவலரை விருதுநகா் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள ஆவியூா் காவல் நிலையத்தில் கணினி இயக்கும் அமைச்சுப் பணியாளராக சரண்யா கடந்த டிசம்பா் 2-ஆம் தேதி முதல் பணி புரிந்து வருகிறாா். இந்த நிலையில், அந்தக் காவல் நிலையத்தில் பணி புரிந்த உதவி ஆய்வாளா் வீரணன், அவரை ஒருமையில் பேசியதாவும், தலைமைக் காவலா் கண்ணன் அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து சரண்யா, இணைய தளம் மூலம் மதுரை சரக டிஐஜி பொன்னிக்கு, உதவி ஆய்வாளா் வீரணன் உட்பட 7 போலீஸாா் மீது புகாா் மனு அனுப்பினாா்.
இதையடுத்து டிஐஜி, விருதுநகா் துணைக் காவல் கண்காணிப்பாளா் அா்ச்சனா தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்து உத்தரவிட்டாா்.
இந்த நிலையில், ஆவியூா் நிலைய உதவி ஆய்வாளா் வீரணன், தலைமைக் காவலா் கண்ணன் ஆகியோரை விருதுநகா் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் உத்தரவிட்டாா்.