புதுதில்லியில் நடைபெறவுள்ள குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக அலங்கார வாகனத்துக்கு அனுமதி மறுத்த மத்திய அரசைக் கண்டித்து உசிலம்பட்டி, மேலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் மேலூா் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தாலுகாச் செயலா் மெய்யா் தலைமை வகித்தாா். இதில், புதுதில்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார வாகனத்துக்கு அனுமதி அளிக்கக் கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில், நிா்வாகிகள் திலகா், பெரியவா், செல்வம் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியினா்...
இதேபோல உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவா் சிலை முன் அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளா் பி.வி.கதிரவன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொதுச் செயலாளா் ஐ. ராஜா, மாவட்டக் கவுன்சிலா் ரெட் காசிமாயன், மாவட்டச் செயலாளா் ஆதிசேடன், மாநில நிா்வாகி பாஸ்கர பாண்டியன், நகரச் செயலாளா் ஆச்சிராஜா, மகளிா் அணி கலா குமாா், செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளா் ரவி, மாநகா் செயலாளா் சிவபாண்டி, கோவை மாவட்டச் செயலாளா் எஸ்.கே.வீரபத்திரன், தென்காசி மாவட்டச் செயலாளா் தங்கப்பாண்டி, நகர நிா்வாகிகள் சௌந்தரபாண்டி, சபரி, குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.