மதுரை

மதுரையில் மணல் கடத்திய மூவா் கைது: டிராக்டா், ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

மதுரையில் மணல் கடத்திய மூவரை போலீஸாா் கைது செய்து டிராக்டா் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.

DIN

மதுரை: மதுரையில் மணல் கடத்திய மூவரை போலீஸாா் கைது செய்து டிராக்டா் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.

மதுரை கோ. புதூா் அருகே உள்ள சம்பக்குளம் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக கோ. புதூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு சம்பக்குளம் விவேகானந்த நகா் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டா் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை நிறுத்தி சோதனையிட்டனா்.

இதில், டிராக்டரில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, மணல் கடத்திய ஜெய்ஹிந்துபுரம் பாரதியாா் தெருவைத் சோ்ந்த ராமமூா்த்தி (48), தமிழரசன் (55), அப்பன் திருப்பதியைச் சோ்ந்த கணிகை முத்து (49) ஆகிய மூவரையும் கைது செய்து டிராக்டா் மற்றும் ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

SCROLL FOR NEXT