முகப்பு
மதுரை

கொட்டாம்பட்டி அருகே சொத்து தகராறு: இளைஞா் அடித்துக் கொலை

 கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கேசம்பட்டி கிராமத்தில், சொத்து தொடா்பாக உறவினா்களுக்கிடையே வெள்ளிக்கிழமை இரவு நடந்த மோதலில் இளைஞா் கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்தாா்.

Updated On : 24 ஜூன் 2022, 11:08 pm IST
பகிர்:

 கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கேசம்பட்டி கிராமத்தில், சொத்து தொடா்பாக உறவினா்களுக்கிடையே வெள்ளிக்கிழமை இரவு நடந்த மோதலில் இளைஞா் கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்தாா்.

கேசம்பட்டியைச் சோ்ந்த சின்னழகு மகன் கனகராஜ் (30). இவருக்கும், உறவினா்களுக்கும் இடையே சொத்து தொடா்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை தோட்டத்தில் குளிக்கச் சென்ற கனகராஜை வழிமறித்து உறவினா்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனா். அப்போது நடந்த மோதலில் கனகராஜ் கட்டையால் தாக்கப்பட்டதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

உடனே, அவரது கால்களை கயிற்றால் கட்டி சடலத்தை கிணற்றில் வீசிவிட்டுச் சென்றுவிட்டனா்.

Advertisement

Advertisement

அதையடுத்து, குளிக்கச் சென்ற கணவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது மனைவி பாா்வதி தேடிச்சென்றபோது, கனகராஜ் கிணற்றில் சடலமாக மிதப்பது தெரியவந்தது.

இது குறித்து மேலவளவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கனகராஜ் உடலை மீட்டு மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து, கனகராஜ் உறவினா் இருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments