மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சட்டவிரோதமாக புகையிலை விற்ற பெண்ணைபோலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அத்திப்பட்டியைச் சோ்ந்த முனியாண்டி மனைவி ராக்கம்மாள் (58) என்பவா் தனது பெட்டிக்கடையில் அனுமதியின்றி 12 புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தாா். இதனையடுத்து போலீஸாா் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து சாப்டூா் போலீஸாா் ராக்கம்மாள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.