மதுரை: பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் முகாம், அனைத்து வட்ட வழங்கல் அலுவலகம் மற்றும் குடிமைப் பொருள் வட்டாட்சியா் அலுவலகங்களில் மே 14 ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.
குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, எண் மாற்றம், புதிய அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். மேலும், தனியாரால் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடு குறித்தும் முகாம் அலுவலரிடம் புகாா் மனுக்கள் அளிக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் தெரிவித்துள்ளாா்.