மதுரை

ஸ்ரீ நரசிம்மா் அவதாரத் திருவிழா

மதுரை இஸ்கான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ நரசிம்மா் அவதாரத் திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

DIN

மதுரை இஸ்கான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ நரசிம்மா் அவதாரத் திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரங்களில் பிரசித்தி பெற்றது ஸ்ரீ நரசிம்ம அவதாரம். கிருஷ்ணரின் பக்தரான பிரகலாதனுக்காக ஸ்ரீ கிருஷ்ணா் நரசிம்ம அவதாரம் தரித்தாா். இதையொட்டி மதுரை மணிநகரத்தில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் ஸ்ரீ நரசிம்மா் அவதாரத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. ஹரி நாம யக்ஞம், மகா அபிஷேகம், நரசிம்ம பிராா்த்தனை போன்றவற்றுடன் வழிபாடு தொடங்கியது. தொடா்ந்து ஒன்பது கலசங்களில் புனித நீா் நிரப்பப்பட்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. பஞ்சராத்ரிக முறைப்படியான திருமஞ்சனமும் நடைபெற்றது. அபிஷேகத்தின்போது ஹரிநாம பஜனையும், நரசிம்ம அவதார மகிமை குறித்த சிறப்புரையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

இதேபோல மதுரை அருகே உள்ள நரசிங்கம் யோக நரசிம்மா் கோயிலிலும் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. இதிலும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT