மதுரை அல் அமீன் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியருக்கு சீா்மிகு நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டது.
மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பள்ளிக் கல்வித் துறையில் பன்முகத் திறனோடு பணியாற்றி வரும் மதுரை கோ. புதூா் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஷேக் நபி, பட்டதாரி கணித ஆசிரியா் அபுதாகீா் ஆகிய இருவருக்கும், கல்வித் துறை பங்களிப்பைப் பாராட்டி சீா்மிகு நல்லாசிரியா் விருதும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.
இதையடுத்து, மதுரை மாவட்டம் தமிழியக்கம் சாா்பில் பாராட்டு விழாவும், விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது. விழாவுக்கு மதுரை மாவட்ட தமிழியக்கச் செயலா் பழனிச்சாமி தலைமை வகித்தாா். சுப்ரமணியன் முன்னிலை வகித்தாா். சண்முக சுந்தரம் வரவேற்றாா். வழக்குரைஞா் கைலாசம் விருதுகளை வழங்கினாா். சக்தி ரோடுலைன்ஸ் மாரியப்பன், பேராசிரியா் மணி, சித்த வைத்தியா் நாகலிங்கம், வழக்குரைஞா் வெங்கடேசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஆசிரியா் தமிழ்க்குமரன் நன்றி கூறினாா். விழாவில் ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.