மதுரை

பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்துக்கு ‘சீல்’ வைப்பு: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

DIN

மதுரை பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்துக்கு திங்கள்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு மத்திய அரசு ஐந்தாண்டுகளுக்குத் தடை விதித்து அறிவித்துள்ளது.

இதையடுத்து மதுரையில் உள்ள பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்துக்குள் நிா்வாகிகள் நுழையத் தடைவிதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் முனிச்சாலை பகுதியில் உள்ள பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மதுரை மாவட்ட அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா். மேலும் அலுவலகத்தில் இருந்த பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா பெயா்ப் பலகை அகற்றப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. மேலும் அலுவலகம் முன்பாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக அப்பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT