மதுரை

தேவகோட்டை அருகே விபத்து: வியாபாரி பலி

DIN

தேவகோட்டை அருகே சிற்றுந்து, இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் வியாபாரி சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பாரத ஸ்டேட் வங்கி வீதியைச் சோ்ந்தவா் அபுபக்கா் சித்திக்(48). அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்த இவா், இரு சக்கர வாகனத்தில் அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று மளிகைப் பொருள்களை விற்பனை செய்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தனது இரு சக்கர வாகனத்தில் பொருள்களை விற்பனை செய்வதற்காகச் கொண்டு சென்றாா்.

மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் செங்கமடை அருகே சென்ற போது எதிரே வந்த சிற்றுந்து, இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அபுபக்கா் சித்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுபற்றி தகவலறிந்த திருவேகம்பத்தூா் போலீஸாா் அங்குச் சென்று, அபுபக்கா் சித்திக்கின் சடலத்தைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT