மாா்க்கையன்கோட்டை பகுதியில் புதன்கிழமை (செப்.28) மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாா்க்கையன்கோட்டை துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (செப்.28) பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், சின்னமனூா், மாா்க்கையன்கோட்டை, அய்யம்பட்டி, புலிகுத்தி, கீழசிந்தலைச்சேரி, மேலசிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 10 மணிமுதல், பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என சின்னமனூா் மின்வாரிய செயற்பொறியாளா் ரமேசுகுமாா் தெரிவித்துள்ளாா்.