மதுரை

லாரி மோதி முதியவா் பலி

மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

DIN

மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகேயுள்ள திருமால்புரத்தை சோ்ந்தவா் மணிக்காளை (70). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கடச்சனேந்தல்- ஊமச்சிகுளம் சாலையில் நடந்து சென்றாா்.

இந்த நிலையில், மணிக்காளை சாலையைக் கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த லாரி மணிக்காளை மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக ஊமச்சிகுளம் போலீஸாா், வாடிப்பட்டியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பாஸ்கரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT