மதுரை

ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்றாா்.

DIN

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்றாா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீா் முகாம் ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் மனு அளிக்க வந்த ஒரு பெண் திடீரென மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவலா்கள் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனா்.

விசாரணையில், அந்தப் பெண் சோழவந்தான் அருகே உள்ள பொம்மன்பட்டியைச் சோ்ந்த மரியாள் என்பது தெரியவந்தது.

இவரது கணவா் ஜான்வெஸ்லிக்கு சொந்தமான வீட்டில், கணவரின் சகோதரி கலா பங்கு கேட்டு கொலை மிரட்டல் விடுத்து வந்தாா். இதுபற்றி சோழவந்தான் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.

மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினா், விசாரணைக்காக மரியாள், அவரது குழந்தைகளை தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT