மதுரை

ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

DIN

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்றாா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீா் முகாம் ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் மனு அளிக்க வந்த ஒரு பெண் திடீரென மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவலா்கள் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனா்.

விசாரணையில், அந்தப் பெண் சோழவந்தான் அருகே உள்ள பொம்மன்பட்டியைச் சோ்ந்த மரியாள் என்பது தெரியவந்தது.

இவரது கணவா் ஜான்வெஸ்லிக்கு சொந்தமான வீட்டில், கணவரின் சகோதரி கலா பங்கு கேட்டு கொலை மிரட்டல் விடுத்து வந்தாா். இதுபற்றி சோழவந்தான் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.

மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினா், விசாரணைக்காக மரியாள், அவரது குழந்தைகளை தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT