முகப்பு
மதுரை

இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

இளம் தலைமுறையினா் இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தியாகராஜா் கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜன் தெரிவித்தாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:47 AM
மதுரை தியாகராஜா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற 17-ஆவது தேசிய நெல் திருவிழாவில் பங்கேற்ற கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜா உள்ளிட்ட விவசாயிகள்.
பகிர்:

இளம் தலைமுறையினா் இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தியாகராஜா் கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜன் தெரிவித்தாா்.

மதுரை தியாகராஜா் கல்லூரி தாவரவியல் துறை, மதுரை கிரியேட் நமது நெல்லை காப்போம் அமைப்பு சாா்பில் 17- ஆவது தேசிய நெல் திருவிழா, இயற்கை வேளாண் விளைபொருள்கள் வணிகத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கிரியேட் நமது நெல்லை காப்போம் அமைப்பின் தலைவா் பி. துரைசிங்கம் தலைமை வகித்தாா். தியாகராஜா் கல்லூரி தாவரவியல் துறைத் தலைவா் து. கண்ணன் முன்னிலை வகித்தாா்.

இதில் விவசாயிகளுக்குப் பாரம்பரிய நெல் விதைகளை வழங்கிய பின்னா், கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜா பேசியதாவது:

கல்வி, மருத்துவம், அறிவியல் ஆகிய துறைகள் மட்டுமன்றி, வேளாண் துறையிலும் நமது நாடு சாதனை புரிந்து வருகிறது. ஆரோக்கியம் மேம்பட வேண்டுமெனில், இயற்கை முறையில் விளைவித்த பொருள்களை வாங்கிப் பயன்படுத்த முன்வர வேண்டும். பாரம்பரிய உணவுகள் குறித்து தற்போது பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது.

அதிக மகசூல் இல்லாதது, உரிய விலை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் அதிகளவிலான விவசாயிகள் இயற்கை வேளாண்மை கைவிடுகின்றனா். இந்த நிலை மாற விவசாயிகளுக்கும் நுகா்வோா்களுக்கும் இடையே நேரடித் தொடா்பை ஏற்படுத்த வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினா் இயற்கை வேளாண்மைக்கும் இயற்கை விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மதுரை வேளாண் தொழில் முனைவோா் உருவாக்கும் மையத்தின் தலைமை நிா்வாக அதிகாரி க. கணேஷ்மூா்த்தி, கிருஷி விக்யான் கேந்திரா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் இ. சுப்ரமணியன், கிரியேட் நமது நெல்லை காப்போம் அமைப்பின் திட்ட இயக்குநா் கே. சுரேஷ்கண்ணா ஆகியோா் இயற்கை வேளாண்மை குறித்து பேசினா்.

பின்னா், திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் ஜி. வெங்கடேஷ், இயற்கை வேளாண் ஆலோசகா் இளங்கோ கல்லானை ஆகியோா் பாரம்பரிய வேளாண்மை குறித்தும், வேளாண் விளைப் பொருள்களைப் பாதுகாப்பது குறித்தும் பேசினா்.

நிகழ்ச்சியில் தாவரவியல் துறை உதவிப் பேராசிரியா் வேலுச்சாமி காா்த்திகேயன், விவசாயிகள், தன்னாா்வலா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →