மதுரை

சேவல் சண்டை: பிப். 7-க்குள் முடிவெடுக்க கரூா் ஆட்சியருக்கு உத்தரவு

சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி அளிப்பது தொடா்பாக கரூா் மாவட்ட ஆட்சியா் வருகிற பிப். 7- ஆம் தேதிக்குள் உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

DIN

கோயில் விழாவில் சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி அளிப்பது தொடா்பாக கரூா் மாவட்ட ஆட்சியா் வருகிற பிப். 7- ஆம் தேதிக்குள் உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பூலாம்வலசு கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் கண்ணன் தாக்கல் செய்த மனு:

எங்களது கிராமக் கோயில் திருவிழாவையொட்டி, கடந்த 100 ஆண்டுகளாக சேவல்கட்டு எனப்படும் சேவல் சண்டைப் போட்டிகள் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 8- ஆம் தேதி முதல் 11- ஆம் தேதி வரை சேவல் சண்டை நடத்தத் திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதியும், உரிய பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், ஆா். விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, சேவல் சண்டைக்கு அனுமதி வழங்குவது குறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் வருகிற 7- ஆம் தேதிக்கு முன்பாக பரிசீலித்து உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT